மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைக்கப்பட்டிருப்பதால், திட்டமிட்டபடி இம்முறை நிச்சயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும், என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
வகுப்பறைகளில் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை குறித்து, புகார் தெரிவிக்க, இலவச அழைப்பு எண் 1098 14417 ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரும் கல்வியாண்டில் அனைத்து புத்தகங்களிலும், குழந்தைகளுக்கான உதவி எண்கள் அளிக்கப்படும், என தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது நோட்டு புத்தகங்களில், இந்த இலவச அழைப்பு எண்கள், ரப்பர் ஸ்டாம்ப் மூலம் இடம்பெறச் செய்யப்படும், என்றும் தெரிவித்தார்.
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME